Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கவலை தீர்க்கும் மருந்து

கவலை தீர்க்கும் மருந்து

கவலை தீர்க்கும் மருந்து

கவலை தீர்க்கும் மருந்து

ADDED : ஜூலை 09, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
* உணவைத் தேடி மனிதன் அலைவது கூடாது. கடவுளைத் தேடிக் கண்டடையமனிதன் பிறவி எடுத்திருக்கிறான்.

* அன்பு வழியில் கடவுளை நோக்கி ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள். பக்தியே கவலையைத் தீர்க்கும் மருந்து.

* தனக்காக பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும் பிறர் நலத்திற்காகச் செய்வதே உயர்ந்த பிரார்த்தனை.

* சர்வ வல்லமை நிறைந்த கடவுளைக் காணவே கண்கள் தரப்பட்டுள்ளன.

* வேகத்தைக் காட்டிலும் விவேகத்துடன் சரியான இலக்கை நோக்கி மனிதன் பயணம் செய்ய வேண்டும்.

* எப்போதும் மனசாட்சி சொல்வதைக் கேட்டு செயல்படுங்கள். நல்ல எஜமானனாகவும், வழி காட்டியாகவும் துணைநிற்பது அதுவே.

* அன்பு, ஒழுக்கம், ஜீவகாருண்யம் ஆகிய நல்ல குணங்களைக் கொண்டவன் மனமே கடவுளின் இருப்பிடமாகும்.

* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே ஒழிய கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us